இந்திய தண்டனை சட்டம் பிரிவு 91 (IPC Section 91 in Tamil)
விளக்கம்
சம்மதத்தைக் கொடுக்கிற நபருக்கு அல்லது எந்தநபர் சார்பாக சம்மதம் கொடுக்கப்பட்டதோ அந்நபருக்கு ஏதாவதொரு தீங்கை விளைவிக்கலாம் அல்லது விளைவிக் எண்ணப்பட்ட அல்லது அநேகமாக விளைவிக்கும் என்று தெரிந்த எச்செயல்கள் தனியாகவே குற்றங்களாகிறதோ அச்செயல்களுக்கு சட்டப்பிரிவுகள் 87, 88 மற்றும் 89 களின் விதிவிலக்குகள் நீடிக்கப்படாது. எடுத்துக்காட்டு கருச்சிதைவை விளைவிப்பது (அப்பெண்ணின் உயிரைக் காப்பாறும் நோக்கத்திற்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்டால் தவிர) அப்பெண்ணிற்கு ஏதாவதொரு தீங்கை அது விளைவிக்கலாம் என்ற அல்லது விளைவிக்க எண்ணப்பட்ட அத்தீங்கு தனியாகவே ஒரு குற்றமாகும். ஆகையினால் “அத்தகைய தீங்கின் காரணத்தால்” அது ஒரு குற்றமாக ஆகாது. மற்றும் அத்தகைய கருச்சிதைவை விளைவிப்பதற்கான அப்பெண்ணின் அல்லது அவளது காப்பாளரின் சம்மதம் அச்செயலை நியாயப்படுத்தாது.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34