இந்திய தண்டனை சட்டம் பிரிவு 39 (IPC Section 39 in Tamil)
விளக்கம்
ஒரு முடிவை கருத்தில் கொண்டு ஒரு செயல் செய்யப்படுகின்றது. செய்பவனுக்கு அதன் விளைவு என்னவென்று தெரியும் அல்லது என்ன நடக்கும் என்பதை பற்றிய தெளிவு அவனுக்கு இருக்கும். அப்படி ஒருவன் தான் நினைத்த விளைவை பெறவேண்டும் என்று ஒரு காரியம் ஆக்கும் போது அவனை தன்னிச்சைப்படி காரியம் செய்வதாக கருதப்படும்.
தன்னிச்சையாக
ஒரு நபர் விளைவை ஏற்படுத்துவதற்கு அவர் உள்நோக்கம் கொண்டிருந்த முறைகளால் அதை ஏற்படுத்தாமல் அல்லது அந்த முறைகளை பயன்படுத்தும் நேரத்தில் அம்முறைகளால் அதை அநேகமாக ஏற்படுத்தக்கூடும் என அவருக்குத் தெரிந்த அல்லது அவ்வாறு நம்புவதற்கான காணரத்துடன் செய்யும்போது அவர் அவ்விளைவை தன்னிச்சையாக ஏற்படுத்தியதாகக் கூறப்படுவர்.
எடுத்துக்காட்டு
ஒரு கொள்ளைக்கு உதவுகிற நோக்கத்திற்காக ஒரு பெரிய நகரத்தில் உள்ள ஒரு வசிக்கும் வீட்டிற்கு A என்பவர் இரவில் தீ வைக்கிறார் மற்றும் இப்படியாக ஒரு நபரின் மரணத்தை விளைவிக்கிறார். இங்கு மரணத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தை A கொண்டிருக்காமல் இருக்கலாம். மற்றும் அவரது செயலினால் விளைவிக்கப்பட்டிருக்கும் மரணத்திற்கு வருந்தவும் செய்யலாம். இருந்தபோதிலும் அவர் அநேகமாக மரணத்தை விளைவிக்கக்கூடும் என அவருக்குத் தெரிந்திருந்தால் அவர் மரணத்தை தன்னிச்சையாக விளைவித்திருக்கிறார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34