இந்திய தண்டனை சட்டம் பிரிவு 383 (IPC Section 383 in Tamil)
விளக்கம்
அச்சுறுத்திப் பொருள் பறித்தல் ஒருவருக்குத் தீங்கிழைக்கப்படும் என்று பயன்படுத்தி, அவரிடமிருந்து ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அல்லது முத்திரையிடப்படும் கையொப்பமிட்டும் உள்ள மதிப்புள்ள காப்பீடைக் கொடுக்கும்படி தூண்டுவதை -அச்சுறுத்திப் பொருள் பறித்தல்- என்று சொல்லப்படும். அத்தகைய பயத்தை பொருளை வைத்திருக்கும் நபருக்காவது அல்லது வேறு ஒருவருக்காவது உண்டாகலாம். உதாரணம்: 1. தனக்குப்பணம் கொடுக்காவிட்டால் ராமசாமியைப் பற்றிக் அவதூறாக ஒரு செய்தியை வெளியிடுவேன் என்று பாலன் மிரட்டுகிறான். அந்த மூலம் ராமசாமியைத் தனக்குப் பணம் கொடுக்குமாறு தூண்டுகிறான். ஆகவே பாலன் அச்சுறுதிப் பொருள் பறிக்கும் குற்றத்தைப் புரிகிறான். 2. விளைச்சலில் ஒரு பிரிவைத் தனக்குத் தருவதாக எழுதிக் கொடுக்கா விட்டால், ஆட்களை விட்டுத் தொல்லைப்படுத்துவேன் என்று நிலைச் சொந்தக்காரரை ஒருவன் மிரட்டுகிறான். மிரட்டலுக்குப் பயந்து நிலைச் சொந்தக்காரரும் அப்படியே எழுதிக் கொடுத்து விடுகிறான். மிரட்டித் தன் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டவன் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34