இந்திய தண்டனை சட்டம் பிரிவு 382 (IPC Section 382 in Tamil)


விளக்கம்

திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிச் செல்வதற்காக அல்லது திருடிய பொருளைத் தன்னிடத்திலேயே வைத்திருப்பதாக மரணம் அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றுக்கான ஆயத்தங்களை செய்து விட்டு அல்லது மரணத்தைப் பற்றிய அல்லது காயம் உண்டாகும் என்ற அல்லது தடுக்கப்படுவோம் என்ற அச்சத்தைப் பிறருக்கு ஊட்டுவதற்கான ஆயத்தம் செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்குப் 10 ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். உதாரணம்: 1. முனியனுடைய சொத்தை முருகேசன் திருடுகிறான். திருடும் பொழுது முனியன் தடுத்தால் அவனுக்கு காயம் உண்டாக்குவதற்கானத் தோட்டாக்கள் நிரப்பப் பெற்ற கைதுப்பாக்கியைத் தன் உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறான். முருகேசன் இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளி ஆகிறான். 2. ஒருவருடைய சட்டைப் பையிலுள்ள பொருளைத் திருடும்பொழுது தம்முடைய ஆட்களை அவரைச் சுற்றிவளைத்து கொண்டிருக்கும்படி செய்கிறான். திருடுவதைத் தடுப்பதற்கும் முயற்சி செய்தால் அவரைத் தடுப்பது தான் அவர்களுடைய வேலை, எனவே திருடும் நபர் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 382 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்