இந்திய தண்டனை சட்டம் பிரிவு 378 (IPC Section 378 in Tamil)
விளக்கம்
ஒருவர் தம் வசம் வைத்திருக்கும் அசையும் பொருளை, அவருடைய சம்மதமின்றி, நாணயமற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் அந்த பொருளை அப்படி எடுத்துக் கொள்வதற்காக நகர்த்துவதைத் -திருட்டு- என்று கூறுகிறோம். விளக்கம் - 1: பூமியுடன் பிணைக்கப்பட்டுள்ள அசையாப்பொருளை, அது பூமியுடன் பிணைக்கப் பட்டுள்ள வரையில் திருட முடியாது. பூமியிலிருந்து பிரிக்கப்பட்டவுடன் அந்த பொருள் திருட்டுக்கு உரிய பொருளாகிறது. விளக்கம் - 2: அப்படி அந்தப்பொருள்த் திருடுவதற்காகப் பூமியிலிருந்து பிரிக்கும் பொழுது திருட்டுச் செயலும் புரியப்படுகிறது. விளக்கம் - 3: ஒரு பொருளை நகர்த்தவொட்டாமல் தடுப்பதற்கெனப் போடப்பட்டுள்ள தடையை அகற்றுவதும் அல்லது அந்தப்பொருளை வேறொரு பொருளில் இருந்து பிரிப்பதும், நேரடியாக அதனை நகர்த்துவதும் நகர்த்தல் என்ற பொருளில் கொள்ளப்படும். விளக்கம் - 4: ஒரு மிருகத்தை நகரும்படி செய்யப்படும் எந்தக்காரியமும், அந்த மிருகத்தை நகர்த்துவதாகவே கொள்ளப்படும். நகர்த்தப்பட்டால் அந்தப் பொருளையும் அப்படி நகர்த்தியதாகக் கொள்ளப்படும். விளக்கம் - 5: சம்மதம் தெளிவாகத் தரப்படலாம். அல்லது பூடகமாகவும் தரப்படலாம், சொத்துக்கு உரியவர் மட்டுமின்றி, அவர் சார்பில் அதிகாரம் பெற்ற வேறு யாராலும் அளிக்கப்பட்ட சம்மதமும், அத்தகைய சம்மதமாகவே கொள்ளப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34