இந்திய தண்டனை சட்டம் பிரிவு 349 (IPC Section 349 in Tamil)
விளக்கம்
ஒருவனுடைய உடலை அசைப்பது, அசையாமல் தடுப்பது, அல்லது அசைவில் மாற்றத்தை உண்டாக்குவதும், ஒரு பொருளை அசைத்து, அசையாமல் தடுத்து அல்லது அதனுடைய அசைவில் மாற்றத்தை உண்டாக்குவது ஆகியவற்றின் மூலம் அந்த பொருள் ஒருவனுடைய உடலின் ஒரு பிரிவு அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடை அல்லது வைத்திருக்கும் பொருள் அல்லது அவருடைய உணர்வைத் தொடக்கூடிய ஒரு பொருளைத் தொடுவது ஆகியவற்றில் எதனைப் புரிந்தாலும், அந்த நபர் தாக்குதல் செய்கிறார் என்று கூறலாம். அத்தகைய அசைவு அசைவில் மாற்றம் அல்லது அசைவைத்த தடுக்கும் செயல், கீழே சொல்லப்பட்டுள்ள 3 வகையாக நடைபெறலாம். முதலாவதாக தன்னுடைய உடல் பலத்தைப்பயன்படுத்தி அத்தகைய செயல் நடைபெறலாம். இரண்டாவதாக ஒரு பொருளை அசைப்பதன்மூலம் மேற்கண்ட அசைவினை உண்டாகலாம். மூன்றாவதாக, ஒரு மிருகத்தை அசையச்செய்து அதன் அசைவில் மாற்றத்தை ஏற்படுத்த அல்லது அசைவை நிறுத்தி அந்தச் செயல் நடைபெறலாம்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34