இந்திய தண்டனை சட்டம் பிரிவு 308 (IPC Section 308 in Tamil)
விளக்கம்
ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு காரியத்தைப் புரிகிறான். ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் அந்தக் காரியம் செய்யப்படுகின்றது. அந்தக் காரியத்தின் விளைவால் மரணம் சம்பவித்தால், குற்றம்புரிந்த நபருக்கு கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றம்சாரும் என்றால் மரணம் விளையாவிடினும், குற்றவாளிக்கு மரணத்தை விளைவிக்க முயற்ச செய்ததற்காக 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அந்தக் காரியத்தின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். உதாரணம்: ஒருவரை நோக்கி ஆத்திரத்தில் திடீரென்று கடுஞ்சினம் ஊட்டப்பட்ட நிலையில் மற்றொருவர் சுடுகிறார். அதனால் மரணம் நிகழ்ந்தால், சுட்டவர் மீது கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் சாட்டப்படும். ஆகவே, மரணம் நிகழாதபோது சுட்டவர் மீது, மரணத்தை விளைவிக்க முயற்சிசெய்த குற்றம்சாரும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34