இந்திய தண்டனை சட்டம் பிரிவு 300 (IPC Section 300 in Tamil)
விளக்கம்
மரணத்தை விளைவிக்கு குற்றத்திற்கும், கொலைக்குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். அப்படி கொலைக்குற்றமாகவே கொள்ளத்தக்க நிலைகள் என்னவென்றால், 1. மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலை புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால் அல்லது 2. உடலில் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் ஒருவர் மரணமடையலாம் காயத்தை உண்டாக்கியவருக்கு தான் ஏற்படுத்தும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்த காயத்தை கருத்துடன் உண்டாகுதல் அல்லது. 3. ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது அதனால் மரணம் விளைவிக்கின்றது அப்படி உண்டாக்க வேண்டும் என்று எண்ணிய காயம் இயற்கையின் சாதாரண போக்கில் மரணமடைய செய்வதற்கு போதுமானது என்று அறிந்திருத்தல், அல்லது 4. தான் செய்யும் காரியம் அபாயகரமானது அதனால் மரணம் சம்பவிக்கும் அல்லது பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கக் கூடிய உடல் காயம் ஏற்படும் என்று அறிந்திருந்தும் அத்தகைய காரியத்தைப் புரிதல் அத்துடன் அந்த காரியம் செய்வதற்கு எந்தவிதமான அவசியமும் இல்லாதிருத்தல். உதாரணம்: a) பழனி என்பவனைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் ராமு துப்பாக்கியால் சுடுகிறான். பழனி மரணம் அடைகிறான். ராமு கொலைக்குற்றம் புரிந்தவனாகிறான். b) சண்முகத்துக்கு நோய்வாய்ப்பட்டு உடல் பலவீனமாகியுள்ள நிலையில் பலமான ஆதி அவனைச் சாகடித்துவிடும் என்று அறிந்துள்ள முருகேசன் அவனுக்கு உடம்பில் காயம் உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் ஓங்கியடிக்கிறான். அதன் விளைவாகச் சண்முகம் மரணம் அடைகிறான். உடல் நலமாக உள்ள மனிதனுக்கு அந்த ஆதி மரணத்தை உண்டாகாது. இருப்பினும் முருகேசன் கொலைக் குற்றம் புரிந்தவனாகிறான். முருகேசனுக்குச் சண்முகத்தின் உடல் நிலையைப்பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் காயம் உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் அவன் சண்முகத்தை அடித்திருந்தால் அவன் மீது கொலைக் குற்றம் சாராது. ஏனெனில் அந்த அடி மரணத்தை உண்டாகக்கூடிய அடி அல்ல. c) முனியன் முத்துவைக்க காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் கத்தியால் வெட்டுகிறான் அல்லது தடியால் அடிக்கிறான், அவன் உண்டாக்க நினைத்த காயம் சாதாரணமாக யாருக்கும் மரணத்தை உண்டாக்க கூடியது, காயம்பட்ட முத்து மரணம் அடைகிறான். முனியன் முத்துவைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் காரியம் செய்யவில்லை இருப்பினும் முனியன் மீது கொலைக் குற்றம் சாரும். d) ராமசாமி ஒரு காரணமும் இல்லாமல் ஒரு கூட்டத்தை நோக்கிச் சுடுகிறான். அதனால் கூட்டத்திலிருந்தவன் மரணம் அடைகிறான். யாரையும் கொல்ல வேண்டும் என்ற முன்யோசனையுடன் ராமசாமி கூட்டத்தைநோக்கிச் சுடவில்லை இருப்பினும் ராமசாமி மீது கொலைக் குற்றம் சாரும். மரணம் விளைவிக்கும் குற்றம் எப்பொழுது கொலைக்குற்றம் ஆகாது When Culpable Homicide is Not Murder விதிவிலக்கு: 1 திடீரென்று தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் நிதானத்தை இழந்துவிட்ட சூழ்நிலையில், தன்னைக் கோபப்படுத்தியவரைத் தாக்கி மரணம் அடைய செய்தாலும் அல்லது கோபத்தில் தவறுதலாக வேறொரு நபரின் மரணத்தை உண்டாகியிருந்தாலும் மரணத்தை விளைவிக்கும் குற்றம் கொலைக் குற்றம் ஆகாது. மேலே கூறப்பட்ட விதிவிலக்கு இங்கே சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். 1. அந்தக் கோப உணர்ச்சியை நாமே தேடிப் பெற்றதாக இருக்கக் கூடாது அதாவது நாம் வலிந்து ஒருவரைக் கொள்ளவேண்டும் அல்லது தாக்கவேண்டும் என்று வம்புக்குப் போனதால் விளைந்த சண்டையில் கோபம் ஏற்பட்டு நிதானம் இழந்ததாக இருக்கக் கூடாது. 2. ஒரு பொது ஊழியர் சட்டப்படி தம் கடமையை ஆற்றும்பொழுது அத்தகைய உணர்ச்சி எழுவதற்கு இடம் இல்லை. சட்டப்படி ஒரு செயல் நடைபெறுவதைக் கண்டு பொங்கியெழ முடியாது. 3. ஒருவன் தன்னுடைய தற்காப்பு உரிமையைச் சட்டப்படி பயன்படுத்துவதால், தன்னுடைய உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்தன என்ற வாதமும் ஒத்துக் கொள்ளப்படமாட்டாது. விளக்கம்: கொலைபுரியத்தூண்டும் அளவுக்கு, கோபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருந்ததா இல்லையா என்பதை, அந்தச் சூழ்நிலையை ஒட்டித் தான் முடிவு எடுக்க வேண்டும். உதாரணம்: 1. முருகனால் கோபம் ஊட்டப்பட்ட முனியன் அந்தக் கோபத்தை அடக்க முடியாததன் விளைவால் முருகனுடைய குழந்தையைக் கொன்று விடுகிறான். இங்கு முனியன் மீது கொலைக்குற்றம் சாரும். ஏனெனில் கோபத்தைத் தூண்டியவன் முருகனே அவனுடைய குழந்தை அல்ல. அத்துடன் முருகனுடைய குழந்தை, அந்தக் கோபத்தின் விளைவாகத் தவறுதலாகக் கொல்லப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. 2. ஒரு நீதிபதியின் முன் கொண்டுவரப்பட்ட ஒருவரைப் பார்த்து அந்த நீதிபதி "உன்னுடைய பேச்சை என்னால் நம்ப முடியாது, நீ பொய்ச்சாட்சி கூறுகிறாய், சத்தியத்திற்கு முரணாகப் பேசுகிறாய்" என்று கூறுகிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோபத்தில் நீதிபதியைக் கொன்று விடுகிறான். அந்த நபர் கொலைக்குற்றம் புரிந்தவனாகிறான். விதிவிலக்கு - 2 தன்னை அல்லது தனிஉடைய உடமையைக் காத்துக்கொள்ளும் பொருட்டுப் போராடும் நபர், சில சமயங்களில் சட்ட வரம்பை மீறிச் செயல்பட நேரிடலாம். அப்போது தன்னைத் தாக்குவோரைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தும் முன்யோசனையும் இன்றி பிறரை கொல்ல நேரிடலாம். அதனால் ஏற்பட்ட மரணத்திற்காக அந்த நபருக்கு மரணம் விளைவிக்கும் குற்றம்தான் சாரும், கொலைக்குற்றம் சாராது. உதாரணம்: ஒருவரை சாட்டையால் அடித்து துன்புறுத்துகின்றனர். சாட்டை அடியால் கொடுங்காயம் ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் அடிபட்டவர், தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகக் கைத்துப்பாக்கியால் சுடுகின்றார். அடித்தவர் மரணம் அடைகின்றார். சாட்டையடிக்குப் பிரதியாகத் துப்பாக்கியால் சுடுவது வரம்பு மீறிய செயலானாலும் சுட்டவர் அதைத் தவிர, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியே இல்லை என்று எண்ணி அப்படி சுட்டிருக்கிறார். எனவே சுட்டவர் மீது கொலைக்குற்றம் சாராது. மரணத்தை விளைவிக்கும் குற்றம் மட்டும்தான் சாரும். விதிவிலக்கு - 3 ஒரு பொதுஊழியர் அல்லது கடமையாற்றும். பொதுஊழியருக்கு உதவி செய்யும் ஒருவர் பொது நீதியை நிலை நாட்டும் வகையில் செயல்பட்டு அதனால் மரணம் சம்பவித்தால், அது கொலைக்குற்றம் ஆகாது. ஏனெனினில் பொது நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறாரேயன்றி யாரையாவது கொள்ளவேண்டும் என்ற கேட்ட எண்ணம் அவருக்கு இல்லை. எனவே அவர் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம்தான் சாரும். விதிவிலக்கு - 4 முன்கூட்டியே திட்டமிடப்படாமல் திடீரென்று ஏற்படும் ஒரு சண்டையில் உணர்ச்சிகள் கொந்தளிப்பதால் மரணம் ஏற்படுகின்றது. அந்த சண்டையில் எதிரியின் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அநியாயமாகப் போராடவில்லை. கொடூரமாகவோ அல்லது அசாதாரணமாகவோ யாரும் காரியம்செய்யவில்லை. இந்த நிலையில் ஏற்பட்ட மரணம் கொலையாகாது. மரணத்தை விளைவித்த குற்றம்தான் சாரும். விளக்கம்: சண்டையை யார் தூண்டினார்கள் அல்லது யார் முதலில் வன்செயலுக்கு ஆயத்தமானார்கள் என்ற பிரச்சனை இங்கே முக்கியமல்ல. விதிவிலக்கு - 5 : பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தன்னிச்சையாக மரண அபாயத்தை வலிந்து ஏற்க முன்வந்தால் அல்லது மரணம் அடைந்தாள் அதனை கொலைக்குற்றமாகக் கூற முடியாது. மரணம் விளைவித்த குற்றமாகத்தான் கொள்ளமுடியும். உதாரணம்: தாஸ் என்பவரால் தூண்டப்பட்டு, குமார் என்ற பையன் தற்கொலை செய்து கொள்கிறான். குமாருக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகவில்லை. ஆகவே தன்னிச்சையாக ஒரு காரியத்தை அவனால் வலிந்து செய்யமுடியாது. எனவே தாஸ் மீது கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றம்சாரும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34