இந்திய தண்டனை சட்டம் பிரிவு 221 (IPC Section 221 in Tamil)
விளக்கம்
குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சட்டப்படி குற்றம் சாட்டப்பட்ட வேண்டியவர்களைச் சிறைப்பிடிப்பதற்கும், காவலில் வைப்பதற்கும், ஒரு பொது ஊழியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனால் அந்த பொது ஊழியர் அந்தக் குற்றவாளிகளைக் கருத்துடன் சிறைபிடிக்காமல் விட்டு விடுவதும் தப்பி ஓடிவிடும்படி செய்வதும் அல்லது தப்பி ஓடுவதற்கு முயற்ச செய்யத் துணையாக இருப்பதும் குற்றமாகும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளி, மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்தைப் புரிந்தால் அந்த பொது ஊழியருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
அந்த குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை தண்டனை பெறக்கூடிய குற்றத்தைப் புரிந்திருந்தால் அந்தப் பொதுஊழியருக்கு அபராதத்துடன் அல்லது அபாரதமின்றி மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும்.
அந்த குற்றவாளி 10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறத்தக்க குற்றத்தைப் புரிந்திருந்தால், அந்தப் பொதுஊழியருக்கு அபராதம் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படலாம்.
கைது செய்ய கடமைப்பட்ட பொதுப் பணியாளரை பொறுத்தவரையில் உள்நோக்கத்துடன் கைது செய்யாமல் விட்டுவிடல்
ஒரு பொதுப்பணியாளரான எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில் சட்டப்படி கடமைப்பட்டு, ஒரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்ட யாரேனும் ஒரு நபரைக் கைது செய்து அல்லது அடைத்து வைக்க அல்லது கைது செய்யப்படுவதற்குள்ளான அத்தகைய நபரை உள்நோக்கத்துடன் கைது செய்யாமல் விட்டுவிட்டால், அல்லது அத்தகைய நபரை உள்நோக்கத்துடன் தப்பிவிடச் செய்தால் அல்லது அத்தகைய நபர் அத்தகைய அடைப்புக் காவலிலிருந்து தப்பிக்க அல்லது தப்பிக்க முயற்சி செய்வதற்கு உள்நோக்கத்துடன் உதவினால் பின்வருமாறு தண்டிக்கப்பட வேண்டும்.அதாவது:-
அடைப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அந்நபர், அல்லது அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர், மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் அல்லது கைது செய்யப்படுவதற்கு உள்ளானவராக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
அடைப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் அந்நபர், அல்லது அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர், ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் அல்லது கைது செய்யப்படுவதற்கு உள்ளானவராக இருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.அல்லது
அடைப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் அந்நபர், அல்லது அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர், பத்து வருடங்களுக்கு குறைவான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தால் அல்லது கைது செய்யப்படுவதற்கு உள்ளானவராக இருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அபராதத்துடன் அல்லது அவ்வாறில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34