இந்திய தண்டனை சட்டம் பிரிவு 211 (IPC Section 211 in Tamil)


விளக்கம்

ஒருவருக்குத் துன்பம் உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அவர் மீது குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பதும், பிறரைத் தூண்டி அப்படி நடவடிக்கை எடுக்கச் செய்வதும் குற்றமாகும். சட்ட பூர்வமாகவும் நியாய பூர்வமாகவும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் புரிந்ததாகப் பொய்யான குற்றச்சாட்டைத் தொடர்வதும் குற்றமாகும். இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். அப்படி சுமத்தப்பட்ட குற்றம் மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளும் அதற்கு மேலும் சிறைக்கவலைத் தண்டனையாகப் பெறத்தக்க குற்றச்சாட்டாக இருப்பின், பொய்க் குற்றம் சாட்டியவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
குற்றத்திற்கான பொய்யான குற்றசாட்டை தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன் செய்தல்
எவரேனும், யாரேனும் ஒரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் உள்நோக்கத்துடன், அந்நபருக்கு எதிராக ஏதாவது குற்றச் செயல் நடவடிக்கைகளை தொடுத்தால், அல்லது தொடுக்கும்படி செய்தால், அல்லது யாரேனும் ஒரு நபர் ஒரு குற்றத்தைப் புரிந்திருக்கின்றார்.என்று அந்நபருக்கு எதிராக அத்தகைய செயல் நடவடிக்கை எடுக்க அல்லது குற்றஞ்சாட்ட நியாயமான மற்றும் சட்டப்படியான முகாந்திரம் இல்லையென்று தெரிந்தே பொய்யாக குற்றஞ்சாட்டினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். மற்றும் ஒரு குற்றம் புரிந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்ட அத்தகைய குற்றவியல் நடவடிக்கையானது, மரண தண்டனையுடன், ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது ஏழு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 211 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்