இந்திய தண்டனை சட்டம் பிரிவு 208 (IPC Section 208 in Tamil)
விளக்கம்
எவரேனும், யாரேனும் ஒரு நபரின் உரிமையியல் வழக்கில், அவருக்குத் தர வேண்டியதில்லாத ஒரு தொகைக்கு அல்லது அத்தகைய நபருக்குத் தர வேண்டிய தொகையை விட ஒரு கூடுதலான தொகைக்கு அல்லது அத்தகைய நபருக்கு உரிமையில்லாத ஒரு சொத்துக்கு அல்லது அச்சொத்தில் உள்ள ஆதாய உரிமைக்கு, ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவானது அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பின்னரும் அல்லது ஏதாவதொன்றின் பொருட்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, அவருக்கு எதிராக மோசடியாக ஒரு தீர்ப்பாணை அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட அல்லது பிறப்பிக்க செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவருக்கெதிராக ஒரு உரிமையியல் வழக்கைத் தொடுக்கிறார்.தனக்கு எதிராக தீர்ப்பாணை ஒன்றை A பெறக்கூடும் என அறிந்த z, B என்பவரின் உரிமையியல் வழக்கில், அவருக்கு நியாயமாகத் தர வேண்டியதில்லாத ஓர் அதிகமான தொகைக்கு, தனக்கு எதிராக தீர்ப்புரை வழங்கப்பட மோசடியாக செயல்படுகிறார்.இது B தனக்காக அல்லது z இன் நன்மைக்காக, z இன் சொத்தின்மீது, A விற்கான தீர்பாணையின்கீழ் செய்யப்படும் விற்பனை தொகையில் பங்கு பெறுவதற்கும் செய்யப்பட்டதால், z, இச்சட்டப்பிரிவின்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34