இந்திய தண்டனை சட்டம் பிரிவு 194 (IPC Section 194 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்தியாவில் தற்போது அமலிலுள்ள சட்டத்தின்படி மரண தண்டனையுடன் கூடிய ஒரு குற்றத்தில் யாரேனும் ஒரு நபர் தண்டிக்கப்படசெய்யும் உள்நோக்கத்தில் அல்லது அச்செயலால் அந்நபர் அநேகமாகத் தண்டிக்கப்பட்டுவிடக்கூடும் என்று தெரிந்தே, பொய்சாட்சியத்தைக் கொடுத்தால் அல்லது புனைந்தால், ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். அதன்பேரில் நிரபராதி நபர் தண்டிக்கப்பட்டு மரணதண்டனைநிறைவேற்றப்பட்டிருந்தால்:- மற்றும் அத்தகைய பொய் சாட்சியத்தின் விளைவாக, ஒரு நிரபராதி நபர் தண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், அத்தகைய பொய் சாட்சியம் அளித்த நபர், மரண தண்டனையுடனால் அல்லது இதற்குமுன்பு விவரிக்கப்பட்ட தண்டனையுடனால் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34