இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171C (IPC Section 171C in Tamil)
விளக்கம்
(1)எவரேனும், ஏதாவதொரு தேர்தல் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தன்னிச்சையாகத் தலையிட்டால் அல்லது தலையிட முயன்றால், ஒரு தேர்தலில் தகாத செல்வாக்கு செலுத்துதல் குற்றத்தைப் புரிகிறார். (2).சட்ட உட்பிரிவு(1)இன் பொதுவான தன்மைக்கு பாதகமேற்படா வண்ணம், எவரேனும் (a ).ஏதாவதொரு வகையிலான தீங்குடன், யாரேனும் ஒரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது ஒரு வேட்பாளர் அல்லது வாக்காளர் அக்கறை கொண்ட யாரேனும் ஒரு நபரை அச்சுறுத்தினால், அல்லது (b ).ஒரு வேட்பாளரை அல்லது வாக்காளரை அல்லது அவர் அக்கறை கொண்ட யாரேனும் ஒரு நபரை, தெய்வ வெறுப்பிற்கு அல்லது ஆன்மீக கண்டனத்திற்கு ஆளாவார் அல்லது ஆட்படும் ஒரு நிலைக்குள்ளவார் என்று நம்பத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால், அது, இச்சட்ட உட்பிரிவு (1)இன் பொருளின்படி, அத்தகைய வேட்பாளர் அல்லது வாக்காளர் அவரது தேர்தல் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் தலையிடுவதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும். (3).பொதுக் கொள்கையை ஒரு பிரகடனப்படுத்துதல், அல்லது பொது செய்கைக்கு ஓர் உறுதி அளித்தல், அல்லது ஒரு தேர்தல் உரிமையில் குறுக்கிடும் எண்ணமேதுமில்லாமல், ஒரு சட்டப் பூர்வமான உரிமையை மட்டுமே பயன்படுத்தினால், அதை இச்சட்டப் பிரிவின் பொருளின்படி குறுக்கிடுவதற்கு நிகராகக் கொள்ளப்படக் கூடாது.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34