இந்திய தண்டனை சட்டம் பிரிவு 170 (IPC Section 170 in Tamil)
விளக்கம்
ஒருவருக்கு எத்தகைய அரசாங்க பொறுப்பும் இல்லாத போது, தான் ஒரு பொது ஊழியராக பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படி பொறுப்பில் இல்லாத பொது பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படி பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய காரியத்தை செய்தாலும் அல்லது செய்ய முயற்சித்தாலும் குற்றமாகும். இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
ஒரு பொதுப் பணியாளராக ஆள்மாறாட்டம் செய்தல்
எவரேனும், ஒரு பொதுப்பணியாளராக ஏதாவதொரு குறிப்பிட்ட பணியைக் கொண்டிருப்பதாக, அத்தகைய பணியை அவர் கொண்டிருக்கவில்லை என தெரிந்தே, பாசாங்கு செய்தால் அல்லது அத்தகைய பணியைக் கொண்டிருக்கும் யாரேனும் ஒரு பிற நபரைப் போல் பொய்யாக ஆள்மாறாட்டம் செய்தால் மற்றும் அத்தகைய ஆள்மாறாட்ட பதவியின் உருவில், அத்தகைய பணித் தன்மையின் கீழ் ஏதாவதொரு செயலைச் செய்தால் அல்லது செய்வதற்கு முயன்றால், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34