இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (IPC Section 153 in Tamil)
விளக்கம்
கலகம் செய்வதற்குத் தூண்டி விட்டு அதனால் கலகம் ஏற்பட்டால் அந்தக் கலகத்தைத் தூண்டியவருக்கு ஓர் ஆண்டுக்கு மேற்படாத சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
தூண்டுதலின் விளைவாகக் கலகம் ஏற்படாவிட்டாலும் கழகத்தை தூண்டியவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக் காவலுடன் கூடிய அபராதமும் தந்தையாக விதிக்கப்படும்.
கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல்
எவரேனும், எந்தவொன்று சட்டவிரோதமானதோ, அந்தஒன்றைச் செய்கையில், ஆழ்ந்த வெறுப்புடன், அல்லது வேண்டுமென்றே, யாரேனும் ஒரு நபருக்கு ஏற்படுத்தும் ஆத்திரமூட்டலானது கலகம் புரியப்படும் குற்றத்தை விளைவிக்கும் என்ற உள்நோக்கத்தில் அல்லது அநேகமாக விளைவிக்கும் என தெரிந்தே அத்தகைய ஆத்திரமூட்டலை ஏற்படுத்தி அத்தகைய ஆத்திரமூட்டலின் விளைவில் கலகக் குற்றம் புரியப்பட்டால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்; மற்றும் அந்த கலகக் குற்றம் புரியப்படாவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34