இந்திய தண்டனை சட்டம் பிரிவு 130 (IPC Section 130 in Tamil)
விளக்கம்
எவரேனும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதி சட்டபூர்வ பாதுகாவலிலிருந்து தப்பிப்பதில் தெரிந்தே துணை புரிந்தால் அல்லது உதவினால் அல்லது யாரேனும் ஒரு அத்தகைய கைதியை மீட்டால் அல்லது மீட்பதற்கு முயன்றால், அல்லது சட்டபூர்வ பாதுகாவலிலிருந்து எந்தவொரு அத்தகைய கைதி தப்பித்திருக்கிறாரோ, அந்த கைதிக்கு புகலிடமளித்தால் அல்லது மறைத்தால் அல்லது அத்தகைய கைதியை திரும்ப பிடிப்பதற்கு ஏதாவதொரு எதிர்ப்பை அளித்தால் அல்லது அளிக்கமுயன்றால், ஆயுள் சிறைத் தண்டனையுடன், அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கும் உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம் :-நாட்டின் ஒரு கைதி அல்லது போர்க் கைதி, இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியில் சுதந்திரமாயிருக்க அவரின் நிபந்தனை விடுப்பில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது எந்தவொரு பகுதியில் சுதந்திரமாயிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறாரோ, அந்த பகுதிக்கு வெளியே அவர் சென்றால், சட்டபூர்வமான பாதுகாப்பிலிருந்து அவர் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுவார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34