இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124A (IPC Section 124A in Tamil)
விளக்கம்
எவரேனும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தலால், அல்லது மற்றபடியாக இந்தியாவில் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்தினால் அல்லது ஏற்படுத்த முயன்றால் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அல்லது தூண்ட முயன்றால் அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்தைக் கூடுதலாகக் கொண்ட மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம் 1:-"அவநம்பிக்கை" என்ற வார்த்தையானது, விசுவாசமின்மை மற்றும் பகைமையின் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்குகிறது. விளக்கம் 2:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் சட்டப்பூர்வ முறைகளால் அவைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு நோக்கத்துடன் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது. விளக்கம் 3:-பகைமை, அவமதிப்பு அல்லது அவநம்பிக்கையைத் தூண்டாமல் அல்லது தூண்ட முயற்சிக்காமல், அரசாங்கத்தின் நிர்வாக அல்லது பிற செயல்பாட்டின் கண்டனத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள், இச்சட்டப்பிரிவின்கீழ் ஒரு குற்றமாக அமையாது.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34