இந்திய தண்டனை சட்டம் பிரிவு 113 (IPC Section 113 in Tamil)
விளக்கம்
ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்த தூண்டிவிட்டவரின் பங்கிலான உள்நோக்கத்துடன் ஒரு செயல் தூண்டிவிடப்பட்டிருக்கும்போது, மற்றும் அத்தூண்டிவிடுதலின் விளைவால், தூண்டிவிட்டவர் எச்செயலுக்காகத் தண்டனைக்குள்ளாக வேண்டுமோ, அச்செயல் தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்டதிலிருந்து ஒரு வேறுபட்ட விளைவை ஏற்படுத்தினால், அவ்விளைவை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் அச்செயலை அவர் தூண்டிவிட்டார் என்பதுபோலவே அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு, இருப்பினும், தூண்டப்பட்ட அச்செயல் அவ்விளைவை அநேகமாக விளைவிக்கும் என அவருக்குத் தெரிந்திருந்தால் ஏற்படுத்தப்பட்ட அவ்விளைவிற்காக அத்தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவருக்குக் கொடுங்காயத்தை விளைவிப்பதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.அத்தூண்டிவிடுதலின் விளைவால், z க்கு கொடுங்காயத்தை B விளைவிக்கிறார்.அதன் விளைவால் z மரணமடைகிறார்.இங்கு, தூண்டிவிடப்பட்ட அந்த கொடுங்காயம் அநேகமாக மரணத்தை விளைவிக்கும் என்று A க்குத் தெரிந்திருந்தால், கொலைக்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் தண்டிக்கப்படுத்தலுக்கு A உள்ளாவார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34