இந்திய தண்டனை சட்டம் பிரிவு 111 (IPC Section 111 in Tamil)


விளக்கம்

ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் ஒரு வேறுபட்ட செயல் செய்யப்பட்டிருக்கும் போது, அதை அவர் நேரடியாகத் தூண்டிவிட்டதுபோலவே அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு, செய்யப்பட்ட அச்செயலுக்காக அத்தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். விலக்கு:-இருப்பினும் செய்யப்பட்ட செயலானது தூண்டுதலின் ஒரு சாத்தியமான விளைவாக மற்றும் தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் அல்லது எந்தச் சதி அத்தூண்டுதலை ஏற்படுத்துகிறதோ, அந்த சதியின் உதவியுடன் அல்லது தொடர்வில் புரியப்பட்டு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a )z என்பவரின் உணவிற்குள் விஷத்தை வைப்பதற்கு, ஒரு குழந்தையை A என்பவர் தூண்டுகிறார், மற்றும் அந்நோக்கத்திற்க்காக அக்குழந்தையிடம் விஷத்தை கொடுக்கிறார்.அக்குழந்தை, அத்தூண்டுதலின் விளைவால், z இன் உணவிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, Y என்பவரின் உணவிற்குள் அவ்விஷத்தைத் தவறுதலாக வைக்கிறான்.இங்கு, அக்குழந்தை A யினுடைய தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் செயல்பட்டிருந்தால் மற்றும் அச்செயல் தூண்டுதலின் ஒரு சாத்திய விளைவு சூழ்நிலையின்கீழ் செய்யப்பட்டிருந்தால், z யினுடைய உணவிற்குள் விஷத்தை வைப்பதற்கு அக்குழந்தையை அவர் தூண்டிவிட்டது போலவே, அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு A தண்டனைக்குள்ளாவரர். (b )A என்பவர்.z என்பவரின் வீட்டைக் கொளுத்துவதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.B அவீட்டிற்கு தீ வைக்கிறார் மற்றும் அதே நேரத்தில் அங்குள்ள சொத்தின் திருட்டைப் புரிகிறார்.அவ்வீட்டைக் கொளுத்துவதற்கான தூண்டுதலுக்கு A குற்றவாளியாக இருந்தாலும்கூட, திருட்டைத் தூண்டியதற்கான குற்றவாளி ஆகமாட்டார்;ஏனென்றால், திருட்டு என்பது ஒரு முற்றிலும் வேறுபட்ட செயலாக இருக்கிறது.மற்றும் தீ வைப்பதன் ஒரு சாத்தியமான விளைவாக இல்லை. (c )B மற்றும் C என்பவர்களை, கொள்ளையின் நோக்கத்திற்காக நாடு இரவில் ஒரு வசிக்கும் வீட்டை உடைத்துத் திறப்பதற்கு A என்பவர் தூண்டுகிறார், மற்றும் அந்நோக்கத்திற்க்காக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார்.B மற்றும் C அவ்வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள், மற்றும் அங்கு வசிப்பவர்களில் ஒருவரான z என்பவரால் தடுக்கப்பட்டபோது, z யைக் கொலை செய்கிறார்கள்.இங்கு அந்த தூண்டுதலின் சாத்திய விளைவாக அந்தக் கொலை இருந்தால், A கொலைக்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குள்ளாவார்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 111 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்