இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109 (IPC Section 109 in Tamil)
விளக்கம்
ஏதாவதொரு குற்றத்தைத் தூண்டிவிடும் எவரேனும், அந்த தூண்டிவிடுதலின் விளைவால் தூண்டப்பட்ட செயல் புரியப்பட்டால், மற்றும் அத்தகைய தூண்டுதலின் தண்டனைக்காக, இச்சட்டத்தால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காதபோது, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:- தூண்டுதலின் விளைவால், அல்லது சதியின் தொடர்வில், அல்லது எந்த உதவி தூண்டுதலாக ஆகுமோ அந்த உதவியுடன், ஒரு செயல் அல்லது குற்றம் புரியப்படும்போது, தூண்டுதலின் விளைவால் அது புரியப்பட்டிருப்பதாகக் கூறப்படும். எடுத்துக்காட்டுகள் (a )A என்பவர், B என்ற ஒரு பொதுப் பணியாளருக்கு, B இன் அலுவலகப் பணிகளைச் செய்கையில் சில சலுகைகளை Aக்குச் செய்வதற்கு, ஒரு வெகுமதியாக ஒரு கையூட்டைப் பெற்றுக் கொடுக்கிறார்.B அக்கையூட்டைப் பெற்றுக் கொள்கிறார்.சட்டப்பிரிவு 161இல் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றத்தை A தூண்டிவிட்டிருக்கிறார். (b )A என்பவர், பொய்யான சாட்சியத்தை அளிப்பதற்கு B என்பவரைத் தூண்டுகிறார்.அதூண்டுதலின் விளைவால், B அக்குற்றத்தைப் புரிகிறார்.அக்குற்றத்தைத் தூண்டியதற்கு A குற்றவாளியவார். மற்றும் B க்கு உண்டான அதே தண்டனைக்கும் உள்ளாக வேண்டும். (c )A மற்றும் B என்பவர்கள், z என்பவருக்கு விஷம் கொடுப்பதற்கு ஒன்றுசேர்ந்து திட்டமிடுகிறார்கள்.அச்சதியின் தொடர்வில், A விஷத்தைக் கொண்டுவந்து மற்றும் z க்கு அதை அவர் கொடுக்கலாம் என்பதன் பொருட்டு, அதை Bக்குக் கொடுக்கிறார்.அச்சதியின்தொடர்வில், A இல்லாதபோது zக்கு, B விஷத்தைக் கொடுக்கிறார் மற்றும் அதனால் zஇன் மரணத்தை விளைவிக்கிறார்.இங்கு, B கொலைக்கு குற்றவாளியாவார்.A சதியினால் அக்குற்றத்தைத் தூண்டியதற்குக் குற்றவாளியாவார், மற்றும் கொலைக்கான தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34