இந்திய தண்டனை சட்டம் பிரிவு 108 (IPC Section 108 in Tamil)


விளக்கம்

ஒரு குற்றத்தைத் புரிவதற்கு அல்லது ஒரு குற்றமாகின்ற எந்தஒரு செயலையும் புரிவதற்குத் தூண்டிய ஒரு நபர், அந்த தூண்டுபவருடைய அதே உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் தகுதியுள்ள ஒரு நபரால் அது புரியப்பட்டால், ஒரு குற்றத்தை தூண்டியவர் ஆவரர். விளக்கம் 1:-ஒரு செயலின் சட்ட விரோத செய்வனச் செய்யாமையின் தூண்டுதல், அந்த தூண்டுபவர் அச்செயலைச் செய்வதற்கு அவர் கடமைப்பட்டவராக இல்லாவிட்டாலும் கூட அது ஒரு குற்றமாக ஆகலாம். விளக்கம் 2:-தூண்டுதல் குற்றத்தை ஏற்படுத்துவதற்கு, தூண்டப்பட்ட செயல் புரியப்பட்டிருக்க வேண்டும் அல்லது அக்குற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அவ்விளைவை ஏற்படுத்திருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று. எடுத்துக்காட்டுகள் (a ) A என்பவர், C என்பவரைக் கொலை செய்வதற்கு, B என்பவரைத் தூண்டுகிறார். B அவ்வாறு செய்ய மறுக்கிறார்.கொலை செய்வதற்கு B யைத் தூண்டியதற்கு, A குற்றவாளியாவார். (b ) A என்பவர், D என்பவரைக் கொலை செய்வதற்கு, B என்பவரைத் தூண்டுகிறார். அத்தூண்டுதலின் தொடர்வில், B, D யை குத்துகிறார்.D அக்காயத்திலிருந்து பிழைத்துக் கொள்கிறார்.கொலை செய்வதற்கு B யைத் தூண்டியதற்கு, A குற்றவாளியாவரர். விளக்கம் 3 :- தூண்டப்பட்ட அந்நபர் ஒரு குற்றம் புரிவதற்கு சட்டத்தால் தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்பது, அல்லது தூண்டிவிட்டவர் கொண்டிருக்கிற அதே குற்ற உள்நோக்கம் அல்லது தெரிதலை, அல்லது ஏதாவதொரு குற்ற உள்நோக்கம் அல்லது தெரிதலை அவன் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று. எடுத்துக்காட்டுகள் a) A என்பவர், ஒரு குற்ற உள்நோக்கத்துடன், ஒரு குற்றத்தை புரிவதற்கு சட்டத்தால் தகுதியுடைய, மற்றும் A யை போலவே ஒரு குற்றமாகுமோ, அச்செயலைப் புரிவதற்கு ஒரு குழந்தையை அல்லது மனநலம் குன்றியவரை தூண்டுகிறார். இங்கு, அச்செயல் புரியாவிட்டாலும் அல்லது அவ்வாறில்லாவிட்டாலும், ஒரு குற்றத்தைத் தூண்டியதற்கு A குற்றவாளியாகிறார். b) A என்பவர், ழ் என்பவரைக் கொலை செய்யும் உள்நோக்கத்துடன், z இன் மரணத்தை விளைவிக்கிற ஒரு செயலைச் செய்வதற்கு, ஏழு வருடங்கள் வயதுக்கு கீழான B என்ற ஒரு குழந்தையை தூண்டுகிறார். B அந்த தூண்டுதலின் விளைவால், A இல்லாதபோது, அச்செயலைச் செய்து மற்றும் அதனால் z இன் மரணத்தை விளைவிக்கிறார். இங்கு, ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் B சட்டத்தால் தகுதி உடையவராக இல்லாதபோதும் கூட, ஒரு குற்றத்தைப் புரிவதற்கு சட்டத்தால் B தகுதி கொண்டிருப்பதைப் போல அதேமுறையில், மற்றும் கொலையைப் புரிந்ததற்கு A தண்டனைக்கு உள்ளாக வேண்டும், மற்றும் அதனால் மரண தண்டனைக்கு அவர் உட்பட வேண்டும். c) A என்பவர், B என்பவரை ஒரு குடியிருக்கும் வீட்டிற்கு தீ வைக்க தூண்டுகிறார்.A யினுடைய தூண்டுதலின் விளைவால், B அவரின் மனநலம் குன்றியதன் விளைவால், அச்செய்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ள, அல்லது அவர் செய்வது சட்டப்படி தவறா அல்லது சட்டத்திற்கு மாறானதா என்று அறிந்துகொள்ள இயலாமலிருக்கும்போது, அவ்வீட்டிற்கு தீ வைக்கிறார்.B எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை, ஆனால் A ஒரு குடியிருக்கும் வீட்டிற்கு தீ வைக்கும் குற்றத்தைத் தூண்டியதற்குக் குற்றவாளியவார் மற்றும் அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குள்ளாவார். (d ) A என்பவர் ஒரு திருட்டு புரியப்படச் செய்வதற்கு உள்நோக்கம் கொண்டு, B என்பவரை, z என்பவருக்குச் சொந்தமான சொத்தை, z இன் உடமையிலிருந்து எடுப்பதற்குத் தூண்டுகிறார்.அச்சொத்து, A க்கு சொந்தமானது என B நம்புவதற்கு A தூண்டுகிறார்.அது A யினுடைய சொத்து என நம்பி, நன்னம்பிக்கையில், z இன் உடமையிலிருந்து அச்சொத்தை B வெளியே எடுக்கிறார்.B இந்த தவறான கருத்தின் கீழ் செயல்பட்டதாலும், நேர்மையின்றி எடுக்காததாலும் மற்றும் அதனால் திருட்டைப் புரியவில்லை.ஆனால், திருட்டை தூண்டியதற்கு A குற்றவாளியாவார்.மற்றும் B திருட்டைப் புரிந்திருப்பதைப் போலவே, அதே தண்டனைக்கு உள்ளாக வேண்டும். விளக்கம் 4:-ஒரு குற்றத்தின் தூண்டுதல், ஒரு குற்றமாக இருக்கும்போது, அத்தகைய ஒரு தூண்டுதலின் தூண்டுதலும் ஒரு குற்றமாகும். எடுத்துக்காட்டு A என்பவர், z என்பவரைக் கொலை செய்வதற்கு, c என்பவரைத் தூண்டுமாறு B என்பவரைத் தூண்டுகிறார்.அதன்படி B, z ஐக் கொலை செய்வதற்கு c ஐத் தூண்டுகிறார் மற்றும் B இன் தூண்டுதலின் விளைவால் அக்குற்றத்தை C புரிகிறார்.B கொலைக்கான தண்டனையுடன் அவரின் குற்றத்திற்காக தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும்;மற்றும் A அக்குற்றத்தைப் புரிவதற்கு Bஐத் தூண்டிவிட்டதால், A யும், அதே தண்டனைக்குள்ளாக வேண்டும். விளக்கம் 5:-சதியாலான தூண்டுதல் குற்றம் புரியப்படுவதற்கு அதைப் புரியும் நபருடன் அத்தூண்டிவிடுபவர் அக்குற்றம் பற்றி திட்டமிட்டிருக்க வேண்டும் என்பது அவசியமானதன்று.எந்த சதியின் தொடர்பாக அக்குற்றம் புரியப்பட்டதோ, அச்சதியில் அவர் ஈடுபட்டிருந்தால் அது போதுமானதாகும். எடுத்துக்காட்டு A என்பவர், z க்கு விஷம் கொடுப்பதற்காக, B யுடன் ஒன்றுசேர்ந்து ஒரு திட்டமிடுகிறார்.அவ்விஷத்தை Aதான் கொடுக்க வேண்டுமென்று ஒப்புக்கொள்ளப்பட்டது.அதன்பின்பு B, ஒரு மூன்றாவது நபர் அந்த விஷத்தைக் கொடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, C என்பவருக்கு அத்திட்டத்தை, ஆனால் A யினுடைய பெயரைக் குறிப்பிடாமல் விளக்குகிறார்.C அவ்விஷத்தைக் கொண்டுவருவதற்கு உடன்படுகிறார், மற்றும் விளக்கப்பட்ட முறையில் அதைப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக அதைக் கொண்டுவந்து மற்றும் B யிடம் கொடுக்கிறார்;அதன்விளைவால் z மரணமடைகிறார்.இங்கு A மற்றும் C ஒன்றுசேர்ந்து சதி செய்யவிட்டாலும்கூட, இருந்தபோதிலும், எச்சதியின் தொடர்வில் z கொலை செய்யப்பட்டிருக்கிறாரோ, அச்சதியில் C ஈடுபட்டிருந்திருக்கிறார்.ஆகையினால், இச்சட்டப்பிரிவில் பொருள் விளக்கப்பட்டுள்ள குற்றத்தை C புரிந்திருக்கிறார், மற்றும் கொலைக்கான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 108 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்