இந்திய தண்டனை சட்டம் பிரிவு 106 (IPC Section 106 in Tamil)
விளக்கம்
மரணத்தைப் பற்றிய அச்சத்தை உண்டாக்கக் கூடிய தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதியான மற்றொருவருக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அந்த செயல் குற்றமாகாது.
உதாரணம்:
அமர்சிங்கைக் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் தாக்க முற்படுகின்றது. கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமல் தப்பிக்க முடியாது. அனால் அப்படித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் பொழுது கூட்டத்தில் கலந்துள்ள குழந்தைகளுக்குத் தீங்கு நேரிடலாம். தற்காப்புக்கென அந்தக் கூட்டத்தை நோக்கிச் சுடுவதால், அந்தக் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்பட்டாலும் அமர்சிங் மீது குற்றம் சுமத்த முடியாது.
அப்பாவி நபருக்குத் தீங்கின் அபாயம் அங்கிருக்கும்போது, அபாயகரமான தாக்குதலுக்கு எதிரான தனிநபர் தற்காப்பு உரிமை
எந்தவொரு தாக்குதல், மரணத்தின் எதிர்பார்ப்பு அச்சத்தை நியாயமாக ஏற்படுத்துகிறதோ, அந்த தாக்குதலுக்கெதிரான தனிநபர் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துகையில், ஒரு அப்பாவி நபருக்குத் தீங்கின் அபாயமின்றி அந்த உரிமையை அவர் முழுமையாய் பயன்படுத்த முடியாது என்ற சூழ்நிலையில் அக்குற்றம் புரிந்தவர் இருந்தால், அவரின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் வரை நீட்டிக்கிறது.
எடுத்துக்காட்டு
A என்பவர், அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் ஒரு கும்பலால் தாக்கப்படுகிறார்.அக்கும்பலின்மீது துப்பாக்கியால் சுடாமல், அவரின் தனிநபர் தற்காப்பு உரிமையை அவர் முழுமையாகப் பயன்படுத்த முடியாது, மற்றும் அந்த கும்பலுடன் கலந்திருக்கிற இளம் சிறார்களுக்கு தீங்கின் அபாயமின்றி அவர் சுட முடியாது.அவ்வாறான துப்பாக்கிச் சூட்டினால், சிறார்களில் எவருக்கேனும் அவர் தீங்கு விளைவித்தால், A குற்றமேதும் புரியவில்லை.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34