இந்திய தண்டனை சட்டம் பிரிவு 105 (IPC Section 105 in Tamil)


விளக்கம்

சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும் காலம் Commencement and continuance of the right of private defence of Property எப்போதும் நம்முடைய சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயம் உண்டாகிறதோ அப்பொழுதே நம்முடைய சொத்தினை பாதுகாக்கும் உரிமையும் நமக்குக் கிடைக்கின்றது. நமது சொத்தைத் திருட வரும் பொழுது, திருடனிடமிருந்து நமது சொத்தை மீட்கும் வரையில் நமக்கு அந்த உரிமை இருக்கிறது. அல்லது அவற்றை மீட்க அதிகாரிகளின் உதவி நமக்குக் கிடைக்கும் வரையில் அந்த உரிமை இருக்கிறது. அதேபோல் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வரும்போதும் கொள்ளையடிக்க முயற்சி செய்யும்போதும் மரணம் அல்லது தவறாகத் தடை செய்யும் அபாயம் ஏற்படும் பொழுதும், அத்தகைய அபாய நிலை அல்லது உணர்வு நீங்கும் வரையில் நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கின்றது. அதே போல் குற்றவாளி அத்துமீறி நுழைதல், சொத்துக்களை அழித்தல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து புரியும்வரை நமக்குத் தற்காப்பு உரிமை இருக்கின்றது.
 
சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையின் தொடக்கம் மற்றும் தொடர்ச்சி
சொத்திற்கு ஒரு நியாயமான எதிர்பார்ப்பு அச்சத்துடனான ஆபத்து தொடங்கியதும், சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது தொடங்குகிறது. திருட்டிற்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் அச்சொத்துடன் அவர் சென்றுவிடும் வரையிலோ அல்லது பொது அதிகார அமைப்பினரிடமிருந்து உதவியைப் பெரும் வரையிலோ அல்லது பொது அதிகார அமைப்பினரிடமிருந்து உதவியைப் பெரும் வரையிலோ, அல்லது அச்சொத்தைத் திரும்பப் பெறப்படும் வரையிலோ நீட்டிக்கிறது.கொள்ளைக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் யாரேனும் ஒரு நபருக்கு மரணம் அல்லது காயம் அல்லது முறையற்ற தடுத்தலை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்க முயற்சிக்கின்ற காலம் வரையிலும் தொடர்கிறது அல்லது உடனடி மரணம் அல்லது உடனடி காயம் அல்லது உடனடித் தனிப்பட்ட தடுத்தலுக்கான அச்சம் உள்ள காலம் வரையிலும் தொடர்கிறது. குற்றமுறு அத்துமீறல் அல்லது வன்குறும்புக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, குற்றம் புரிந்தவர் குற்றமுறு அத்துமீறல் அல்லது வன்குறும்பைப் புரிவதைத் தொடரும் காலம் வரையிலும் தொடர்கிறது. இரவில் வீட்டில்-கன்னமிடலுக்கெதிரான சொத்தின் தனிநபர் தற்காப்பு உரிமையானது, அத்தகைய வீட்டில்-கன்னமிடுதலால் தொடங்கப்பட்டிருக்கும் வீட்டில்-அத்துமீறல் தொடர்கின்ற காலம் வரையிலும் தொடர்கிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 105 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்